குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள் மனப்பாடம் செய்ய அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஓர் நல்ல வழிமுறை வழிமுறை, இதோ உங்களுக்காக !


"நேரத்தை வீணாக்கும் போது உன் கடிகாரத்தைப் பார்; 
ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை"  

என்னும் விவேகானந்தரின் கூற்றை ஒவ்வொரு மாணவரும் தம் மனதில் கொண்டு படித்தால் வாழ்க்கை என்னும் வனத்தில் வெற்றிக்கனி பறிக்கலாம்.


Distraction while studying

"எங்க பசங்க  எப்ப பார்த்தாலும் படித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  ஆனால் mark  மட்டும் 60% க்கு மேல தாண்ட மாட்டேங்குது" என்று பெற்றோர்கள் பலரும் புலம்புவதை இந்நாட்களில் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவர்களின் கவனச்சிதறலே ஆகும். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் அந்த சாதனங்களை சரியான வழியில் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அதை விடுத்து படிக்கும் போது தனது நண்பர்களுடன் WhatsApp ல் chat செய்வது, மொபைல் போனில் அரட்டை அடிப்பது, Youtube - ல் வீடியோ பார்ப்பது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் படிப்பின் மீது நாட்டம் குறைந்து, படிப்பது மனதில் பதியாமல் மதிப்பெண்கள் குறைய காரணமாகிறது. இதற்க்கு பெற்றோரும் ஒரு காரணமாகின்றனர். தங்களது குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பொழுது பெற்றோர்கள் மொபைல் போன், டிவி இவற்றை தவிர்ப்பது நல்லது.  நமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக இந்த தியாகத்தை நாம் செய்து தான் ஆக வேண்டும்.

பாடப்புத்தகத்தை எப்படி படிப்பது?

எப்போதுமே மாணவர்கள் ஒரு பாடத்தை படிக்கத் தொடங்குவதற்கு முன், அதை எந்த முறையில் படிக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.  புத்தகத்தை open செய்தவுடன் முதல் பத்தியிலிருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது.  கீழ்கண்ட முறையை ஒவ்வொருவரும் படிக்கும்போது கையாண்டால் மிக எளிதில் எவ்வளவு பெரிய பாடத்தையும் மனதில் பதிய வைக்க முடியும். இந்த முறையில் மனப்பாடம் செய்தால் நமது நினைவாற்றலும் அதிகரிக்கும்.  


அமெரிக்காவைச் சேர்ந்த H.A. ராபின்சன் மற்றும் தாமஸ் என்ற மனோதத்துவ நிபுணர்கள் மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்த புதியதோர் யுக்தியை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதுவே PQRST method எனப்படும். 


PQRST Method


P  - Preview - மேலோட்டமாக வாசித்தல் 

💫 இதுவே நாம் வாசிப்பின் முதற்படி ஆகும். படிக்க போகும் பாடத்தை முதலில் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். 

💫அவ்வாறு மேலோட்டமாக படிக்கும் போது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள தலைப்புகளுக்கும், துணை தலைப்புகளுக்கும் (Heading and Side Heading) அதிக முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும். 

💫 இந்த வாசிப்பின் மூலம் நாம் படிக்கும் பாடம் எதைப்பற்றியது என்பது நமக்கு எளிதில் விளங்கும். அந்த பாடத்தைப் பற்றிய ஒரு outline sketch கிடைக்கும்.

💫 பாடச் சுருக்கத்தை (Glossery of Terms) நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் பல கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: உயிரியலில் Archaeopteryx என்ற சொல்லை வாசிக்கும்போது Archaeopteryx என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடையே ஏற்படும்.)


Q - Questioning  -  வினா எழுப்புதல் (Asking Questions)

❓நாம் இப்போது நம் வாசித்தலின் இரண்டாவது படிக்கு வந்துள்ளோம். 

❓பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் ஒவ்வொன்றையும்  கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் நமக்குள் அதிகரிக்கும்.

❓எதற்காக இதைப் படிக்கிறோம்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு: அறிவியலில் Electrolysis  என்ற தலைப்பை வாசிக்கும்போது எலெக்ட்ரோலிஸிஸ் என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)


R - Reading - வாசித்தல்

📖 நமது வாசிப்பின் மூன்றாவது படியே Reading எனப்படும் ஆராய்ந்து வாசித்தல் ஆகும். இந்நிலையில் நாம் அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.

📖 படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்த தலைப்புகளோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும்.

📖    புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும்.

📖 மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும்.


S - Summarise  - திரும்பச் சொல்லிப் பார்த்தல்

☛  வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.

☛  இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். 

☛ படித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.

☛ மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.


T - Test yourself - மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்

✔ இதுவே நம் வாசிப்பின் கடைசிபடி ஆகும். இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.  நாம் எவ்வளவு ஆழமாக பாடத்தை புரிந்து கொண்டு படித்துள்ளோம் என்பதற்கான ஒரு சுயபரிசோதனை ஆகும். 

✔   தேர்வு எழுதும் முன்னர், ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.



தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை

👍   பதற்றம், அச்சம் ஆகியவற்றை நிதானமாய் இருந்து அகற்ற வேண்டும்.

👍 சிலவற்றை நம்மால் நினைவுக்கு அழைக்க முடியாது. அது வராது என்ற எண்ணம் முதலில் கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக எப்பொழுதும் இருப்பது போல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழு கவனத்தையும் சக்தியையும் செலுத்தி நம் நினைவுக்குக் கொண்டு வந்தால் கண்டிப்பாக நினைவுக்கு வரும்.

👍தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருத்துகளை ஒன்ரோடொன்று தொடர்படுத்திக் கொண்டு படிப்பதும் ஒழுங்காகச் சிந்தித்துப் பார்ப்பதும் நினைவுக்கழைப்பதற்குப் பெரிதும் உதவும்.

👍ஒரு வினாவிற்கான விடை நினைவிற்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்காமல், அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். இவை பின்பு, தானாக நினைவிற்கு வரும். அப்பொழுது எழுதிக் கொள்ளலாம்.


நினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள்

💪 கற்க வேண்டும் என்ற உறுதியும்,  ஆர்வமும் கவனமும் வேண்டும்.


💪 பொருத்தமான மனப்பாடம் செய்யும் முறைகளைக் கையாள வேண்டும்.


💪 தொடர்புபடுத்திக் கற்றல் வேண்டும்.


💪 தொகுத்தலும் சந்தமும் (Grouping and Rhythm) உபயோகிக்க வேண்டும்.


💪 சிறந்த சூழ்நிலையில் கற்க வேண்டும்.


💪 போதிய அளவு ஓய்வும் மாற்றமும்.


💪 திரும்பக் கூறலும் பயிற்சியும்.


பார்க்க கண்கள் இரண்டையும் கொடுத்த இறைவன், தீயவைகளை பார்க்காதிருக்க இமைகளையும் கொடுத்துள்ளார். 


எனவே  மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது நாட்டம் கொண்டு தேவையில்லாதவற்றை தவிர்த்து தங்கள் வாழ்வில் 💯% வெற்றி பெற வாழ்த்துக்கள் !
Get success in student life

Comments

Popular posts from this blog

எலிகளை🐀நமது காருக்குள் 🚗 வராமல் தடுக்க

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?