Posts

கரப்பான் பூச்சிகளிடமிருந்து விடுதலை பெற இதப்படிங்க முதல்ல!

Image
வீட்டிலேயே குறைந்த செலவில் பூச்சிகளின் வரவை தடுக்க ஓர் மருந்து உருண்டை :  அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ஜாலியாக நமது இல்லங்களில் உலாவந்து கொண்டிருக்கும் கரப்பான்களை நடமாட்டத்தை குறைப்பது எப்படி என்பதை பற்றிய பதிவே இது. இரவு நேரங்களில் கரப்பான், பாச்சை (சிறிய வகை கரப்பான்), பல்லி  போன்றவை  நம் வீடுகளின் சமையலறையிலும், வரவேற்பு அறைகளிலும் அழையா விருந்தாளியாக உள்ளே  வந்து விடுகின்றன. இதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது. பல்வேறு கிருமிகள் பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல உபாதைகள் ஏற்பட்டு நாம் உண்ணக்கூடிய உணவே விஷமாக மாறுகிறது.  இதன் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று முடிவெடுத்து அதில் வெற்றியும் பெற்றேன். அதை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. Method 1: இந்த மருந்து உருண்டையை குறைந்த செலவி ல்  நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.  இதற்கு தேவையான பொருட்கள் : மைதா மாவு  - 3 tbsp போரி க்  பவுடர்  - 1 tbsp தண்ணீர் - தேவையான அள...

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

Image
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் மனப்பாடம் செய்ய அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஓர் நல்ல வழிமுறை வழிமுறை, இதோ உங்களுக்காக ! "நேரத்தை வீணாக்கும் போது உன் கடிகாரத்தைப் பார்;  ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை"   என்னும் விவேகானந்தரின் கூற்றை ஒவ்வொரு மாணவரும் தம் மனதில் கொண்டு படித்தால் வாழ்க்கை என்னும் வனத்தில் வெற்றிக்கனி பறிக்கலாம். "எங்க பசங்க  எப்ப பார்த்தாலும் படித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  ஆனால் mark  மட்டும் 60% க்கு மேல தாண்ட மாட்டேங்குது" என்று பெற்றோர்கள் பலரும் புலம்புவதை இந்நாட்களில் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவர்களின் கவனச்சிதறலே ஆகும். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் அந்த சாதனங்களை சரியான வழியில் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அதை விடுத்து படிக்கும் போது தனது நண்பர்களுடன் WhatsApp ல் chat செய்வது, மொபைல் போனில் அரட்டை அடிப்பது, Youtube - ல் வீடியோ பார்ப்பது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் படிப்பின் மீது நாட்டம் குறைந்து, படிப்பது மனதில் பதியாமல் மதிப்பெண்கள் குறைய காரணமாகிறது...

கோபமாக உள்ள உங்க குழந்தையை கையாள சூப்பர் டிப்ஸ்!

Image
இன்றைய நவீன கணிப்பொறி உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினருக்கும் ஒரு பொதுவான வியாதி "கோபம்".  அதில் குழந்தைகளுக்கு எளிதில் கோபம் வந்துவிடுகிறது. இதனை எப்படிப்  புரிந்துகொள்வது? எப்படி சமாளிப்பது? உங்க குழந்தையின் கோபத்தைக் கையாள சூப்பர் டிப்ஸ்! இன்றைய சூழலில்  சிறிய வயது குழந்தைகூட,  கோபம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டது.  சாப்பிட,  தூங்க,  தனக்கு விருப்பமில்லாத விஷயத்தை பெற்றோர் புகுத்தும்போதோ,  தன்னுடைய விருப்பம் நிறைவேறாமல் போனாலோ அல்லது தாமதமானாலும்கூட, படிக்க தன்னை வற்புறுத்துவதுபோல உணரும்போதோ,  இக்கால  குழந்தைகளுக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது.  அதிகமாக  அழுது புரண்டு, கத்தி, சில சமயங்களில் கையில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தும் குழந்தைகள்  தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  இதை பெற்றோர் உடனே கவனிக்காமல் , ’குழந்தைதானே, செய்துவிட்டு போகட்டும்’ என்று விட்டுவிடக் கூடாது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இது கவனித்து மாற்றவேண்டிய ஒரு குணாதிசயம். ...