Posts

Showing posts from May, 2019

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?

Image
நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகைகளை எப்படி பராமரிப்பது..? தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதிரியான முழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங்குவது நல்லது. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. அத‌ற்காக வெ‌ள்‌ளி‌யி‌ன் தர‌த்‌தி‌ல் குறை இரு‌ப்பதாக எ‌ண்ண வே‌ண்டா‌ம்.  ஒவ்வொரு முறை வெள்ளி பாத்திரங்களை உபயோகித்த பின் காற்று படுவதால் கருத்துவிடுகிறது. கடைகளில் ஒவ்வொரு முறை polish க்கு கொடுத்தாலும் அதன் எடை குறைந்து விடுகிறது. அதனால் வீட்டிலேயே எவ்வாறு பள பளவென வெள்ளி பாத்திரங்கள் மின்னும் படியாக சுத்தம் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பட்டு புடவையை பராமரிக்க உபயோகித்த பூந்தி கொட்டையை பயன்படுத்தி எளிதில் வெள்ளி பாத்திரங்களை சுத்தம்

பட்டு புடவையை வீட்டிலேயே துவைத்து பராமரிப்பது எப்படி ??

Image
விதவிதமான  சேலைகள் பல இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் அது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது. பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும். அத்தகைய விலை உயர்ந்த பட்டு புடவையை பராமரிப்பது என்பது அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக அமைகிறது. Dry Clean  செய்ய கொடுத்தால் நமக்கு செலவு அதிகமாகும். அதிக விலை கொடுத்து வாங்கிய பட்டுப்புடவையை பராமரிப்பதற்கு ஆகும் செலவோ அப்பப்பா !  ஒரு புடவைக்கு

பெண்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அருமையான வழி !

Image
கோலம் போடுவதன் தாத்பர்யம்  மற்றும்  மருத்துவ நன்மைகள்  Click here to see more Rangolis... " கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும் " என்பது பெரியோர் வாக்கு. ஆம். நம் வீடுகளில் அதிகாலை ப்ரஹ்ம முகூர்த்தத்தில் (4am - 6am) வாசல் தெளித்து கோலம் போட்டால் நம் இல்லங்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நம் வேதத்தில் சொல்லப்பட்ட உண்மை. எனவே தான்  இன்றும் கிராமப்புரங்களில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். பசுஞ்சாணம் ஓர் கிருமிநாசினியாக செயல்படுவதால் அந்த வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. கோலங்கள் வெறும் அலங்கார நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள தீய மற்றும் எதிர்மறை தாக்கங்களை அழிப்பதற்கும் வரையப்படுகிறது. கோலங்கள் பல்வேறு சமூக, ஆன்மிக நுண் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. 

உடல் அசதியைப் போக்க ஓர் மருந்து ரசம் தயார்!

Image
இந்த கோடை விடுமுறை நாட்களில் ஊரெல்லாம் சுற்றி  களைத்து போய் இருக்கிறீர்களா? உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையை பிடிப்புடனும், நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட மிக முக்கியமானதாகும். இவற்றை சிதைக்கும் வகையில் அலுப்பும், சோர்வும் நம் உடல் மற்றும் மனதின் நோய்களாக இருக்கின்றன.  இந்த அலுப்பு மற்றும் சோர்வே இன்றைய அவசர உலகில் பலரையும் மனம் பிடிப்பில்லாமல் இறுக்கத்தோடு இயங்க வைக்கிறது. "என்னமோ தெரியல டாக்டர். காலையில் எழுந்திருக்கும்போதே உடம்பெல்லாம் குடையற மாதிரி இருக்கு... " என்று பெண்கள் பலர் புலம்பக் கேட்கலாம். அதே போல் அலுவலகம் முடித்து வரும் ஆண்களிடம் கடைக்குப் போகச் சொன்னால் "ஏண்டி! படுத்தற... நானே நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன். மனுஷனை வீட்ல நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?" என அலுத்துக்கொள்ளும் ஆண்களையும் பார்க்க முடிகிறது.  எப்படி இந்த சோர்வு மற்றும் அலுப்பிலிருந்து வெளிவருவது. இதோ உங்கள் உடல் அசதியைப்  போக்குவதற்கு ஒரு சுவையான ரசம் தயார்! இதை எங்கள் வீட்டில் மருந்து ரசம் என்போம். வாங்க பார்க்கலாம். இந்த மருந்து போ